ரணிலுக்கு அவசரமாக தொலைபேசியில் வழங்கிய முக்கிய தகவல்

உச்ச நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு, பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிற்கு தொலைபேசியில் அறிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல கட்சிகள் மனுத் தாக்கல் செய்திருந்தன.

குறித்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன்மூலம் வழமையான முறையில் நாடாளுமன்றம் செயற்படவுள்ள நிலையில், மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.