பரபரப்பிற்கு மத்தியில் மஹிந்த பதவி விலகல்

நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையுத்தரவினை உச்ச நீதிமன்றமும் இன்றயை தினம் நீடித்திருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தகவல் வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ச, நீண்ட நேரம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சற்று முன்னர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.