வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற அன்னாசி அறுவடை விழா….

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற அன்னாசி அறுவடை விழா….

வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா சிறப்பாக இடம்பெற்றது…
வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில், முருகனூர் விவசாய பண்ணையில் செய்கை பண்ணப்பட்டுள்ள தென்னையப் பயிர்செய்கைக்குள் ஊடு பயிராக அன்னாசிப் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் மூலம் 75 அன்னாசிச் செய்கையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு செய்கை மேற்கொள்ள வடமாகாண விவசாய அமைச்சின் மூலம் விவசாய திணைக்களத்தால் மானியங்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இன்று அன்னாசி அறுவடை செய்யப்பட்டு ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

 

 

 

 


வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் அறுவடை விழாவில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, செ.மயூரன், ம.ஜெயதிலக, மாவட்ட விவசாய பணிப்பாளர், விவசாய கல்லூரி அதிபர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், மாணவர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.