கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்கள்

2018ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

பாட விதானங்களுக்கு அமைய நாடு முழுவதும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

வர்த்தக பிரிவில்

குருணாகல் மலியதேவி வித்தியாலத்தை சேர்ந்த மாணவன் லன்ஸகார ஹேரத் முதியன்சலாகே முதலாம் இடித்தை பிடித்துள்ளார்.

கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி ரணவீர ஆராச்சிலாகே உச்சித ஆயத்மா ரணவீர இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கொழும்பு மியுசியஸ் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் வீரகோன் முதியன்செலாகே மலிதி ஜயரத்ன மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

கலை பிரிவில்

பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் சேனாதி தம்யா டி அல்விஸ் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

குருணாகல் மகளிர் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி எதிரிசிங்க முதியன்சலாகே சித்மி நிமாஷி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி பிட்டிகல ஆராச்சிகே இஷானி உமேஷா குமாரி பிட்டிகல மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில்

கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை மாணவி அப்புஹாமிகே கலனி சன்உத ராஜபக்ச முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க பாடசாலை மாணவன் ரவிந்து ஷஷிகத இலங்கமகே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

மாத்தளை சாஹிரா கல்லூரியின் மாணவன் முகமது ரிஸ்மி முகமது ஹக்கீம் கரீன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

பௌதிக விஞ்ஞான பிரிவில்

கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயத்தின் மாணவி சத்துனி ஹன்சனி வசந்த விஜேகுனவர்தன முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

காலி ரிச்சட் கல்லூரியின் மாணவன் சமிந்து சுரான் லியனகே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் ஹெட்டிகன்கனகே தெவிந்து ஜனித் விஜேசேகர மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.