தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவதற்கு இவரே சிறந்த தலைவர்! பொதுமக்கள்

தாயகத்தில் தமிழ் மக்களை தலைமை தாங்கத் தகுதியான தலைவர் சி.வி. விக்னேஸ்வரனே என பெருமளவு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச தமிழ் ஊடகம் ஒன்றினால் கடந்த ஒரு வாரமாக உலகின் பல்வேறு பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவந்த கருத்துக்கணிப்பிலேயே தமிழ் மக்கள் தமது விருப்பை இவ்வாறு வெளியிட்டுள்ளார்கள்.

தாயகத்தில் தமிழ் மக்களை தலைமை தாங்கத் தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு:

48.09 வீதமானவர்கள் (27,720 வாக்குகள்) சி.வீ. விக்னேஸ்வரன் என்றும் 18.68 வீதமானவர்கள் (10,768 வாக்குகள்), இரா. சம்பந்தன் என்றும், 13.82 வீதமானவர்கள் (7,968 வாக்குகள்) கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் என்றும்,

3.9 வீதமானவர்கள் (2248 வாக்குகள்) டக்ளஸ் தேவானந்தா என்றும், 15.5 வீதமானவர்கள் இவர்களைத் தவிர வெறொருவர் என்றும் வாக்குப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

சர்வதேசப் புகழ் பெற்ற தமிழ் இணையத் தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் இலங்கை, இந்தியா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 57,640 பேர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.