மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தீயணைப்பு வாகனம் கோருகிறார் சாள்ஸ் எம் பி……

மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தீயணைப்பு வாகனம் கோருகிறார் சாள்ஸ் எம் பி……

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தேவை கருதி அங்குள்ள உள்ளூராட்சி சபைகளிற்கும் இரு தீ அணைப்பு சேவை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் எழுத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கின் 5 மாவட்டத்திலும் தற்போது ஒரேயொரு மாவட்டமாண யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே தீ அணைப்பு சேவை வசதி உள்ளபோதிலும் ஏனைய மாவட்டங்களில் கிடையாது. இருப்பினும் கடந்த ஆண்டு கிளிநொச்சியில் ஏற்பட்ட பாரிய அணர்த்தம் காரணமாக அதன் தேவை எடுத்துக் காட்டப்பட்டதன் விளைவாக கிளிநொச்சி மாவட்ட மக்களிற்கும் அந்த வாய்ப்பு கிட்டும் நிலமை தென்படுகின்றது.
இந்த நிலையில் வடக்கின் ஏனைய 3 மாவட்டங்களிலும் தீ அணைப்பு சேவை இல்லாத நிலமையில் ஓர் திடீர் அணர்தம் நிகழுமாயின் அதனைக் கட்டுப்படுத்த முடியாத தன்மையே கானப்படுகின்றது. எனவே இவ் இரு மாவட்டங்களின் முக்கியத்துவம் கருதி மன்னார் நகர சபை மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றிற்கு தீ அணைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தப்பாவிடம் கோரிக்கை சம்ப்பிக்கப்பட்டுள்ளது.