இலங்கை சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் ​கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுகள், மதுபானங்கள் மற்றும் ஒரு தொகை வாசனைத் திரவியங்கள் என்பவற்றுடன் குறித்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை ஸ்ரீச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் அவரது மனைவியோடு பிள்ளைகள் இருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.