இலங்கையில் 25 வயது காதலனுடன் இருந்த 52 வயதான காதலிக்கு நேர்ந்த கதி

மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ கடற்பரப்பில் இன்று பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிக மதுபோதையில் இருந்த இவர் சுகயீனமடைந்த நிலையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

52 வயதுடைய வின்பர்க் மீசேல் என்ற குறித்த பெண், 25 வயதுடைய தனது காதலனுடன் மிரிஸ்ஸ கடற்கரையில் இருந்துள்ளார்.

திடீரென அவர் சுகயீனமடைந்த நிலையில், அவசர அம்புலன்ஸ் சேவை உதவியுடன் மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற பின்னர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மரண பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.