பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரை பாவனை! இலங்கை காட்டுக்குள் பெண்ணொருவர் மரணம்

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான முகாமில் பெண்ணொருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ம் திகதி முதல் நடைபெற்று வரும் சுற்றுலா முகாமில் கலந்து கொண்ட பெண் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நேற்று திடீரென கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை உடனடியாக அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியுடன் அம்பலந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகளவான பாலியல் துண்டும் மாத்திரையை பயன்படுத்தியமையினால் மாரடைப்பு ஏற்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கையின் உஸ்ஸன்கொட காட்டுப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 300 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.