யாழில் இளம் பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறிய இளைஞன்!

பெண்களின் நகைகளைக் கொள்ளையடித்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலைா் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் தனிமையில் செல்லும் பெண்களின் தங்க நகைகளைக் கொள்ளையடித்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை மூலம் கொள்ளையடித்து விற்பனை செய்யப்பட்ட நகைகளில் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணையில் சாவகச்சேரி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்