குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவா்கள் இருவா் பலியான சோகம்!

வவுனியா ஈரப்பெரியகுளம் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் தினமான இன்று காலை 11 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

பொங்கல் நாளான இன்று ஐந்து நண்பர்களாக இணைந்து ஈரப்பெரியகுளத்திற்கு சென்று அங்கு தமது பொழுதை கழித்துக்கொண்டிருந்த சமயம்,உணவருந்திய பின்னர் கை கழுவுவதற்காக ஒருவர் குளத்தின் நீர்ப்பகுதிக்கு சென்றபோது தவறுதலாக கீழே வீழ்ததாகவும் அவரை காப்பாற்றும் நோக்கோடு சென்ற மற்றைய நண்பனும்
குளத்தில் வீழ்ந்து மூழ்கி இறந்துள்ளதாகவும் முதல்கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் சாதாரணதர மாணவர்களான 16 வயதுடைய திபின்சன் மற்றும் கரிகரன் ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர். ஏனைய மூவரிடமும் ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பலியானவர்களின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.