தைப்பொங்கல் நாளில் வல்வெட்டித்துறை கடற்கரையில் நடைபெறும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.
நேற்று மாலை மிக பிரம்மாண்டமாக இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
வருடாந்தம் நடைபெறும் இந்தப் போட்டியில் நேற்றும் பெரும் தொகையிலானோர் கலந்து கொண்டனர்.
கண்களை கவரும் விதம் விதமான பிரமாண்டமான பட்டங்கள் பறக்க விடப்பட்டன.
இதனைக்காண பெருந்தொகையான மக்கள் வல்வெட்டித்துறை கடற்கரையில் கூடியிருந்தனர்.
வல்லை வானில் வினோத சமையலறை , புஷ்பக விமானம் , இராணுவ பீரங்கி , எறும்பு , ஊஞ்சல் , கல் உடைக்கும் இயந்திரம் , பறக்கும் கமரா (ட்ரோன்) படகும் மீனவர்களும் , நவீன செய்மதி என வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட 84 பட்டங்கள் ஏற்றப்பட்டன.