அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!

தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தவறும் அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.இரத்தினபுரியில் மினிதியவர வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த பகுதியில் கடமையாற்றும் அரசு ஊழியர்கள் குறித்து தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அரச ஊழியர்கள் தமது கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும்.இந்நிலைமை தவறும் பட்சத்தில் நாட்டில் நிலவும் சட்ட திட்டங்களுக்கிணங்க அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.