இலங்கையில் சற்று முன்னர் நடந்த பெரும் சோகம் – 6 பேர் பலி – 3 பேர் காயம்

புத்தளம் வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் லொரி ஒன்றுடன் சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் சென்ற 6 பேரும் உயிரிழந்ததுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோர விபத்து அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான மோட்டார் வாகனத்தில் 9 பேர் பயணித்துள்ளனர். அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த நபர்களில் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.