யாழ் வைத்தியசாலையில் ஏற்பட்ட மாற்றம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விபத்துச் சிகிச்சைப் பிரிவு விரைவில் திறந்து வைக்கப்படவிருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் விபத்து சிகிச்சை பிரிவு 100 கட்டில் வசதிகளுடன், மூன்று சத்திர சிகிச்சை கூடங்களையும் கொண்டுள்ளது.

இதற்கென அரசாங்கம் சுமார் 600 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.