இலங்கை உட்பட நாடுகளுக்கு ‘WhatsApp’விதித்த கட்டுப்பாடு!

இலங்கை உட்பட நாடுகளுக்கு ‘WhatsApp’ புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.

தமது சேவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள ‘WhatsApp’ நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலியான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அமைய ஒரு செய்தியை ஐந்து முறை மட்டுமே ஒரு உறுப்பினரால் பகிர்ந்து கொள்ள முடியும். இதற்கு முன்னர் அங்கத்தவர்களினால் 20 முறைகள் ஒரே செய்தியை பகிர்ந்து கொள்ள கூடியதாக இருந்தது.

இந்த புதிய நடைமுறையின் மூலம் பிழையான தகவல்கள் வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சுமார் 6 மாத கால ஆய்வின் பின்னரே நிறுவனம் இந்த முறைமையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறைமையினை பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ‘WhatsApp’ ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் இந்த முறைமை சிறந்த பலனை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.