கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் வாகனம் மோதி விபத்து! பயணித்தவர்களின் நிலை?

குருணாகலை – வெல்லவ தொடரூந்து கடவையில் கெப் ரக வாகனமொன்று தொடரூந்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை ஹிரிபிடியில் இருந்து குருணாகலை நோக்கி பயணித்த கெப் வாகனம் , திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் கெப் வாகனத்தில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் குருணாகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவனை தகவல்கள் தெரிவிக்கின்றன.காயமடைந்தவர்களில் இராணுவ மேஜர் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெறும் போது தொடரூந்து கடவையின் சமிக்ஞை வழங்கப்படவில்லை எனவும் , கெப் வாகனத்தின் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.