திருகோணமலையில் நடந்த கொடூரம்…

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை கணவன் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர சம்பவமொன்று இன்று காலை திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவில் உள்ள வெலிங்டன் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கழுத்திலும் வயிற்றிலும் கத்திக் குத்துக்கு இலக்கான மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக கொண்டுச் சென்ற போது உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான கணவன் 35 வயதுடைய அவரது கணவர் தலைமறைவாகியுள்ளார். இவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.