புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மதியம் வட்டவளை பிரிவிற்குட்பட்ட வட்டவளை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் வட்டவளையைச் சேர்ந்த நல்லகண்ணு காளியப்பன் (வயது 78) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.