இலங்கையில் கோழிக் கறியில் பெருந்தொகை புழுக்கள்! திருமண வீட்டில் ஏற்பட்ட பதற்றம்

இரத்தினபுரியில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட காலை உணவினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

திருமண வைபவத்தில் வழங்கப்பட்ட கோழி கறியில் உயிரோடு புழுக்கள் காணப்பட்டமையினால் இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய நகரத்தில் அமைந்துள்ள பிரபல திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு வந்தவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

உணவு பெற வந்தவர் கோழி கறியில் உயிரோடு புழுக்கள் காணப்பட்டதனை முதல் முதலாக அவதானித்துள்ளார்.

உடனடியாக அவர் அந்த இடத்தில் சுகாதார பரிசோதகரை அழைத்து வந்துள்ளார். இது தொடர்பில் சோதனையிட முயற்சித்த போது மண்டபத்தில் ஊழியர்கள் அதனை மறைத்துள்ளனர்.

இதனால் அங்கு பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.