பல்கலைக்கழக மாணவியொருவரின் சடலம் குளியலறையில் மீட்பு..

பல்கலைக்கழக மாணவியொருவரின் சடலம் குளியலறையில் மீட்பு..

மொரடுவை பல்கலைக்கழக மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குளியலறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.நேற்று காலை சடலம் அவரின் கணவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
27 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண், அவரின் கணவருடன் பிலியந்தலை , மடபான திம்பிரிகஸ்வத்த பிரதேசத்தில் தற்காலிக குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில், பிலியந்தலை காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.