களினி கங்கையில் நீராட சென்ற இளைஞன் மாயம்! சோகத்தில் குடும்பத்தினர்

கித்துல்கல, களுகொவ்தென்ன பகுதியிலுள்ள களனி கங்கையில் நீராட சென்ற இளைஞன், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் சுவாரபுர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என்பவரே காணாமல் போயுள்ளாதாக தெரிவித்துள்ளனர்.

சிவனொளிபாதமலைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் யாத்திரைக்கு சென்று, திரும்பும் வழியில் கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையில், சுழியொன்றில் அகப்பட்டே இந்த இளைஞன் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் கித்துல்கல பொலிஸ் பாதுகாப்பு பிரிவினர், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கித்துல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.