வவுனியாவில் தமிழ் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண்! தந்தையின் மோசமான செயல்

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் கர்ப்பிணி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றிய 27வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவ, ர் அவ்வியாபார நிலையத்தின் உரிமையாளரின் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மகளை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்.

பெற்றோர்கள் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று தெரிந்து கொண்ட இருவரும் கடந்த நவம்பர் மாதம் புசல்லாவப் பகுதிக்குச் சென்று பதிவுத்திருமணம் செய்து சில காலம் தங்கியிருந்து விட்டு அண்மையில் வவுனியாவுக்குத் திரும்பினர்.

வவுனியா வியாபார நிலையத்தின் உரிமையாளர், தனது மகளை தனது வியாபார நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

புசல்லாவயில் தங்கியிருந்த இருவரும் அங்குள்ள பொலிஸ் நிலையத்தின் ஊடாக தாம் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும், இருவரும் எவருடைய வற்புறுத்தலின்றி இணைந்து வசித்து வருவதாகவும் முற்கூட்டியே முறைப்பாடு செய்தனர்.

புசல்லாவ பகுதி பொலிஸ் நிலையத்தினூடாக வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு இந்தத் தகவல் பரிமாற்றம் செயய்யப்பட்டுள்ளது.

எனினும் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வவுனியா வர்த்தக நிலையத்தின் உரிமையாளருடன் இணைந்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். வியாபார நிலையத்தின் உரிமையாளரின் மகளைத் திருமணம் செய்து கொண்ட இளைஞனுக்கு நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இது குறித்து பொலிஸார் எவ்வித தகவல்களையும் இளைஞனின் தரப்பினருக்கு வழங்கவில்லை. பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, குறித்த இளைஞனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியர் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸாரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட இளைஞன் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணி பெண் நிர்க்கதியாய் நிற்கின்றார்.

இந்த நிலையில் “வவுனியா பொலிஸார் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன், பக்கச்சார்புடன் நடந்து கொண்டுள்ளனர். எனவே சம்பவத்தில் தொடர்புபட்டவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு நீதியைப் பொற்றுத் தருமாறு“ பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.