ஒரே நாளில் தலைகீழாக மாறிய பிரபல நடிகையின் வாழ்க்கை! யாரென அடையாளம் தெரியாத நிலைமை

சினிமாவில் உச்சத்தை தொட்டவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பட தோல்வியால் நிலை தலைகீழாக மாறிய பிரபலங்களும் இருக்கிறார்கள். குறிப்பாக இது நடிகர்கள், நடிகைகளை தான் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் மாதுரி தீட்சித்.

அண்மையில் அவர் தி கபில் ஷர்மா என்ற டிவி ஷோவில் கலந்துகொண்டு பேசினார். என்னுடைய நடிப்பில் 1988ல் தேஸாப் என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படம் வந்த போது நான் வேறொரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். இதில் ஒரு காட்சியில் நான் உள்பட மூன்று பெண்கள் நடனமாடவேண்டும்.

அப்போது நான் சாதாரண நடிகை. பிரபலம் எல்லாம் கிடையாது. ஆனால் தேஸாப் படத்திற்கு பிறகு என் நிலைமை மாறிப்போனது. என் சகோதரியின் திருமணத்திற்காக அமெரிக்கா சென்று திரும்பி வந்த போது என்னை பார்த்து இதோ போர் கதாநாயகி என கத்திக்கொண்டு ஏர்போட்டில் 3 சிறுவர்கள் ஓடிவந்தார்கள்.

என்னிடம் படத்தில் நான் நடித்த மோகினி கேரக்டரை சொல்லி ஆட்டோ கிராஃப் வாங்கினார்கள் என கூறியுள்ளார்.