கொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை!

கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகம் காரணமாக குறித்த இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்ட பாதைக்கு அருகில் சற்ற முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த குழப்ப நிலை காரணமாக புறக்கோட்டைக்கு அருகில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

லோட்டஸ் சுற்றுவட்ட பாதையின் ஊடாக காலி முகத்திடல் செல்லும் வீதி தற்போது மூடி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.