அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்தி அச்சுறுத்துகின்றது – மஹிந்த

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் இன்று அதிகாரத்தை பயன்படுத்தி அனைவரையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மனுவை சமர்ப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸ் தரப்பினர் தண்ணீர் தாரை பிரயோகித்தும்இ கண்ணீர் புகை பிரயோகத்தில் ஈடுப்பட்டுள்ளமையானது முறையற்ற செயற்பாடாகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.