இலங்கை நிர்வாக சேவைக்கு 47 தமிழர்கள் தெரிவு!

இலங்கை நிர்வாக சேவை இம்முறை 47 தமிழர்கள் தெரிவாகி உள்ளனர்.

இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டோர் விபரம் வெளியாகியுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கை நிர்வாக சேவைக்கு இலங்கை முழுவதும் 175 பேர் தெரிவாகி உள்ளனர்.

இவர்களுக்கான முதல் நியமனம் 2019.03.05 அன்று வழங்கப்பட உள்ளது.

இதில் 62 தமிழ் பேசும் அதிகாரிகள் தெரிவாகி உள்ளதுடன் அதில் 47 தமிழர்களும் 15 முஸ்லிம் அதிகாரிகளும் அடங்கு கின்றனர்.