சாவகச்சேரியில் பாதுகாப்பு கடவை அமைத்து தர கோரி போராட்டம் இடம்பெற்றது…

சாவகச்சேரியில் பாதுகாப்பு கடவை அமைத்து தர கோரி போராட்டம் இடம்பெற்றது…

சாவகச்சேரி சங்கத்தானை பெரியமாவடிக்கு செல்லும் வீதியில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைத்துதரும்படி சங்கத்தானை பெரியமாவடி பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்றைய தினம் காலை 10:15 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதுகாப்பான புகையிரக்கடவை அமைத்து தரவும்

50வருடங்களிற்கு மேலாக நாம் பாவிக்கும் வீதியை மூடுவதை நிறுத்தவும்
மாணவர்கள் பாவிக்கும் வீதியை முட வேண்டாம்
எமது மக்களின் கோரிக்கையை நிறைவேற்று பாதையை மூடிவிடாதே
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இப்போராட்டத்துக்கு ஆதரவாக வடமாகாண சபை உறுப்பினர் ஏம் சிவாஜிலிங்கம் முன்னால் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர்ஆகியோர் கலந்துகொண்டனர்.