யாழ்.வேம்படி பாடசாலை முன்பாக உள்ள வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

யாழ்.வேம்படி பாடசாலைக்கு முன்பாக உள்ள 1ஆம் குறுக்கு வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது.

மேற்படி யாழ்.வேம்படி பாடசாலைக்கு முன்பாக உள்ள 1ஆம் குறுக்கு வீதி, பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் காலை 7.00 – 8.00 மணி வரையும் பாடசாலை முடியும் நேரம் 1.00 – 2.00 மணிவரையும் இவ் வீதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் 20.02.2019 ஆம் திகதி தொடக்கம் இப்பாதையானது ஒருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது.

பிரதான வீதியால் Main Street வரும் வாகனங்கள் யாழ். வேம்படி பாடசாலைக்கு முன்பாக உள்ள 1ஆம் குறுக்கு வீதியூடாக மாத்திரம் பயணித்து ஆஸ்பத்திரி வீதியினை சென்றடையும். சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி வீதி, சப்பல்வீதி ஆகிய வீதிகளினூடாக வரும் வாகனங்கள், ஆஸ்பத்திரி வீதியினை நோக்கி மாத்திரம் பயணிக்க முடியும்.