யாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், கொலன் தோட்டத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நிலத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் அத்திவாரம் வெட்டும் போதே ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.