தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர்!

வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முள்ளிப்பிளவு பகுதியை சேர்ந்த 68 வயதுடைய கிருபாகரன் கோபாலகிருஸ்னன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் வீட்டின் மேல் மாடியில் ஏறி கயிற்றினை போட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்களுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.