வரலாற்றில் முதன்முதலாக டக்ளசுடன் மேடையேறப்போகும் சரவணபவன்!

இந்துக்களின் குறைகேள் அரங்கு எதிர்வரும் 24ம் திகதி யாழில் இடம்பெறவுள்ளது.

யாழிலுள்ள இந்து சமய பேரவை அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு குறைகேள் அரங்கு இடம்பெறும்.

ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழரசுக்கட்சியின் எம்.பி ஈ.சரவணபவன் ஆகியோர் இதில் கலந்துகொண்டு, இந்துக்களின் குறைகளை கேட்கவுள்ளதாக, இந்து சமய பேரவை அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.