யாழில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டவரிற்கு இன்று நேர்ந்த கதி

சாவகச்சேரி ஹோட்டலில் பத்து லட்சம் திருடிய திருடனை கடை உரிமையாளர் தலைமையிலான குழுவினர் மடக்கி பிடித்துள்ளனர்.

கடந்த மாதம் 8ம் திகதி கொள்ளையில் ஈடுபட்ட திருடன் உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் மறைந்திருந்த வேளை இன்று பிடிபட்டார்.

இன்று மாலை 3.00 மணி அளவில் ஸ்ரார் ஹோட்டல் உணவக உரிமையாளரும் அவரது நண்பர்களும் இணைந்து ஐந்து கிலோ மீற்றர் வரை திருடன் ஓடீச் சென்ற போது அவரை வளிமறித்து மடக்கி பிடித்தனர்.

பின்பு சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி பொலிசாரை வரவளைத்து திருடனை அவர்களிடம் கையளித்தனர்.

கைது செய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த குமாரவேல் சந்திரகுமார் என்பது குறிப்பிடத்தக்கது