பாதுகாப்பற்ற சுவர் உடைந்து விழுந்ததில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

பாணந்துறை பிரதேசத்தில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த இடத்தில் பாதுகாப்பற்ற சுவரொன்று உடைந்து விழுந்ததில் பாதுகாப்பு அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் பென்தொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் வடக்கு பாணந்துறை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ,குறித்த அனர்த்தம் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.