மொனராகலை-புத்தள பிரதான வீதியின் மஹகொடயாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
சியபலாவ தேவாலயத்திற்கு யாத்திரை சென்ற மாலபே பகுதியை சேர்ந்த சிலர் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலபே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்த ஐவரும் புத்தள வைத்தியசாலையில் அனுமதிகக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.