யாழில் மாலையை இழந்த சரவணபவன்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு மாலை அணிவித்து, சரவணபவனை புறக்கணித்தமைக்கு என வன்மையான கண்டனங்கள் சமூக லைத் தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் இன் நிகழ்வு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றன இதன் போதே பா.உ சரவணபவனிற்கு மாலை இல்லாத நிலை ஏற்பட்டது.

அன்மையில் யாழில் இடம் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் அணி மகாநாட்டில் பாராளுமன் உறுப்பினர்களான சரவணபவன் மற்றும் சிறிதரன் ஆகியோர் திட்டமிட்டு அழைப்பிதலில் புறக்கணிக்கப் பட்ட நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.