யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 15 பேர் ஆபத்தான நிலையில்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்த 15 பேரும் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

ஏ-9 வீதியின் பரந்தன் பகுதியில் தரித்து நின்ற டிப்பருடன் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 140 km வேகத்தில் பயணித்த பேருந்தை திருப்ப முயற்சித்த போது வீதியிலிருந்து விலகிய மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.