விடுதலைப் புலிகள் தலைவரின் நம்பிக்கைக்குரிய முக்கிய தளபதியின் தாயார் மரணம்

பிரிகேடியர் ஆதவனின்(கடாபி) தாய் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் காலமாகிவிட்டார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியும் விடுதலைப் புலிகளின் தலைவரின் நம்பிக்கைக்குரியவருமான மாவீரர் பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் இன்று
காலமாகிவிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மிகுந்த நம்பிக்கையை பெற்ற ஒரு தளபதியாக இருந்தமை குறிப்பிடத் தக்கது.

பிரிகேடியர் ஆதவனின் தந்தை ஆறுமுகம் அவர்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கிரியைகள் நாளை நெல்லியடி அல்வாய் மேற்கில் காலை 11.30க்கு நடைபெறும்.