யாழில் கோர விபத்து! பரிதாபமாக பலியான இளைஞன்

யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்களிலில் பயணித்த குலேந்திரநாதன் பிருந்தன் (வயது-19) என்பவரே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் படுகாயமடைந்த 32 வயதுடைய எஸ்.சதீஸ்தரன் என்ற பிரதேச சபை ஊழியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.