மட்டக்களப்பில் 19 வயதான இளம் தாய்க்கு ஏற்பட்ட நிலைமை!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இளம் தாயொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று வயதுடைய ஒரு குழந்தைக்கு தாயான, மாவடிவேம்பு -02, மணிவாசகர் வீதியை அண்மித்த பகுதியில் வசித்து வந்த சிவானந்தம் ஜானு (19 வயது) என்ற இளம் தாயின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இளம் தாயொருவரின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்தது.

சம்பவ ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸாரும் தடயவியல் பொலிஸ் குழுவினரும் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.