விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் இலங்கையர்கள் பயணித்தார்களா?

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் இலங்கையர்கள் எவரும் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

அந்த நாட்டுத் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

குறித்த விமானம் நேற்றைய தினம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 30 நாடுகளை சேர்ந்தவர்கள் இருந்ததாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அவற்றுள் இலங்கையர்கள் எவரும் இருந்திருக்க வில்லை என அந்த நாட்டுத் தகவல்கள் தற்போது உறுதி செய்துள்ளன.