யாழ்-கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மிக விரைவில் அறிமுகமாகிறது!!

யாழ்ப்பாணத்துக்கும் – கொழும்புக்குமிடையில் மற்றுமொரு புதிய ரயில் சேவை மேற்கொள்வதற்கு திட்ட மிடப்பட்டு வருவதாக புகையிரத திணைக்கள வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது

அதாவது தற்போது கொழும்பு கோட்டையிலிருந்து தினந்தோறும் பிற்பகல் 3.50 மணிக்கு வவுனியா நோக்கி பயணிக்கும் ரயிலை யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு வருகின்றது.

மேற்படி ரயில் தற்போது வவுனியாவை இரவு 10 மணிக்கு வந்தடைகின்றது.

இந்த ரயில் பின்னர் காலை 5.45 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்பட்டு முற்பகல் 11 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைகின்றது.

இவ்வாறான நிலையில் புதிய ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்படுவதற்கு திட்டமிடப்படு வருவதாக தெரியவருகின்றது.