யாழில் நஞ்சருந்தி உயிரிழக்காத நிலையில் தனக்குத் தானே தீமூட்டி பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமுட்டிக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 08 மணியளவில் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறை கொற்றாவத்தையைச் சேர்ந்த விஜயகாந்த் (வயது -40) என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீமூட்டி உயிரை மாய்க்க முயற்சித்தார்.

“அவர் நேற்றைய தினம் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையிலிருந்து இன்று காலை தப்பித்துச் சென்ற அவர், கடை ஒன்றில் மண்ணெண்ணெய் வாங்கி தனக்குத் தானே தீவைத்துள்ளார்” என்று பொலிஸார்
தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்புலன்ஸுக்கு அறிவித்துவரை அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.