கண்டியில் புதுமனைவிக்கு பரிசு வாங்க சென்ற கணவன்! பின் ஆடைகள் கழன்று தலைதெறிக்க ஓடிய பரிதாபம்

திருமணமான புது மாப்பிள்ளை ஒருவர் தலைதெறிக்க ஓடிய சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.தனது புதிய மனைவிக்கு பரிசு வழங்கச் சென்ற கணவன் ஆடைகள் இன்றி, உயிரை காப்பாற்ற தப்பி ஓடியுள்ளார்.

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் திருமண பந்ததில் இணைந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு பரிசு ஒன்றை வழங்க நினைத்து, வீட்டிற்கு தேவையான பொருட்களும் நாய் குட்டி ஒன்றையும் குறித்த நபர் கொள்வனவு செய்துள்ளார்.

நாய் குட்டியை அருகிலுள்ள தேயிலை செடியின் ஓரத்திலிருந்து எடுத்துச் சென்றுள்ளார்.மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மிகவும் ஆர்வத்தோடு குறித்த நபர் இரண்டு அடிகள் சென்றுள்ளார்.

இதன்போது திடீரென சிறுத்தை ஒன்று குறித்த நபர் மீது பாய்ந்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் நிலைதடுமாறிய அவர், உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி ஓடியுள்ளார்.

இதன்போது அவரின் ஆடையும் கழன்று விழுந்துள்ளது. வீட்டுக்கு வாங்கிய பொருட்களையும் அங்கையே விட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.