வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த குறித்த 8 பேரும், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கச்சதீவு ஆலயத்தின் திருவிழாவிற்கு சென்று சிலாபம் நோக்கி பயணித்த வான், வவுனியா கொக்குவெளி இராணுவ முகாமிற்கு முன்பாக பயணித்தபோது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அருகில் இருந்த மரத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.