முல்லைத்தீவு – ஊற்றங்களை பிள்ளையார் கோவில் நடந்த அதிர்ச்சி செயல்!

முல்லைத்தீவு – ஊற்றங்களை பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வெள்ளி ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், குறித்த ஆலயத்தின் கதவை உடைத்து கொள்ளை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.