யாழ் வைத்தியசாலையில் பெண்ணொருவர் செய்த மோசமான செயல்! அதிர்ச்சியில் நோயாளிகள்

சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நோயாளியிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய குடும்பத் தலைவராகிய அவரை, அதிலிருந்து மீட்பதற்கு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவரிடம் சிறிய பொதியொன்று இருந்துள்ளது.இவ்விடயம் குறித்து சிகிச்சையளித்து வருகின்ற வைத்தியர்கள் வினவியபோது, ஹெரோயின் என கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் அவ்விடத்துக்குக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரிடம் விசாரணையை நடத்தியதுடன் அவரிடமிருந்து மூன்று ஹெரோயின் போதைப் பொருள் பொதிகளை கைப்பற்றி, அவரை கைது செய்துள்ளனர்.