7வயது சிறுவனின் உயிரை பறித்த 75 வயது சுவிஸ் மூதாட்டி! அதிர்ச்சி சம்பவம்

பாசல் மாநிலத்தில் கொசோவோ நாட்டை சேர்ந்த 7 வயது சிறுவன் 75 வயது சுவிஸ் மூதாட்டியினால் கொல்லப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் குறித்த தகவல் பதவிட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,

வழமையாக அந்த சிறுவன் தன் தாயாருடன் வீடு திரும்புவான். கடந்த சில நாட்களாக தாய் மருத்துவமனையில் தங்கி இருப்பதால் நேற்று மாணவன் தனியே வீட்டிற்கு சென்றுள்ளான்.

இந்நிலையில், பாடசாலை முடிவடைந்து வந்த அந்த சிறுவனினான் வகுப்பாசிரியர்தான் மரணமடைந்த நிலையில் புற்தரையில் கிடந்த கண்டு காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இக்கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் எவரும் இல்லை. நேற்று மாலை அந்த மூதாட்டி தானே கொலை செய்ததாக காவற்துறையிடம் சரணடைந்துள்ளார்.

அஞ் சிறுவன் நரிக்கப்பட்டு பின் பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான். பாசல் மாநிலத்தில் பாடசாலை பாதைகள் காவற்துறையின் கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடசாலையில் நானும் சில ஆண்டுகள் கல்விகற்றுள்ளேன். மரங்கள் சூழ்ந்த வீதி எப்போதும் அமைதியாக இருக்கும் பாடசாலை செல்பவரை தவிர ஏனையோர் இந்த வீதியை உபயோகிப்பது மிகக்குறைவு.

இந்த கொலையை செய்திருக்க கூடியவர் மனநலம் பாதிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது. வெளிநாட்டவர் மீது கொண்ட எதிர்ப்பு மனநிலையால் இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.