யாழில் பேருந்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாடல்! இறக்கிவிடப்பட்ட பயணி

தமிழ்ப்பாடல் ஒலிபரப்புமாறு கேட்ட பயணியை பேருந்தின் சாரதியும், நடத்துனரும் இறக்கிவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும், குறித்த நபர் தம்மிடம் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளதாக சாரதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சாரதியும், நடத்துனரும் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஹம்பாந்தோட்டை சென்ற தனியார் பேருந்தில் சிங்களப் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டுள்ளன.

அதில் பயணித்த பயணியொருவர் தமிழ் பாடல் இல்லையா எனக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பயணியை இறக்கிவிட்டனர் என்று பயணியின் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.