பலத்த பாதுகாப்புடன் யாழில் வந்திறங்கியபிரதமர்

பலத்த பாதுகாப்புடன் யாழில் வந்திறங்கியபிரதமர்

பலமான இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைகள் மற்றும் புதிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ். மாவட்டத்திற்கு பலத்த பாதுகாப்புடன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் உலங்கு வானூர்தி மூலம் யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் 3 மணியளவில் “பலமிக்கதோர் இலங்கையை கட்டியெழுப்புதல், திட்டமிட்ட பயணத்தை மேற்கொள்ளுதல்” என்னும் தலைப்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன், சாகல ரத்னாயக்க, விஜயகலா மகேஸ்வரன், முப்படையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.